வழக்கம் போல நேத்திக்கு எங்க மாமாவுக்கு ஃபோன் செஞ்சேன்.அப்போன்னு பாத்து அவரோட லேண்ட்லைன் ஃபோனுக்கு எதோ கால் வந்தது.
மாமா: "ஒரு நிமிஷம் லைன்லயே இருடா, யாருன்னு பாக்கறேன்"
சரி அவர டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு அவர் பேசறத மட்டும் ஒட்டு கேட்டேன்.
"அடடே நீங்களா? சொல்லுங்கோ"
"எக்மோர் வந்தாச்சா? கண்டிப்பா இப்பவே கெளம்பி வரேன்"
"இல்ல இல்ல, எதுவும் வெளில சாப்ட வேண்டாம், இங்கே எல்லாம் இருக்கு, சமயல் வட பாயசத்தோட பன்னிட்டா இவ"
"வேண்டாம் வேண்டாம். ஃபரெண்டுக்கெல்லாம் அப்பறமா இங்க வந்து சேர்ந்துட்டு சாவகாசமா பேசிக்கலாம், தோ வந்துட்டேன்"
ஃபோன் வெச்ச சத்தம் கேட்டது.
"ஹூம் சொல்லுடா என்ன பண்ற? அங்க ராத்திரியா?"
"சும்மா தான் பன்னேன், யாரு மாமா ஃபோன்ல?"
"பாவம்டா யாரோ சேஷாத்ரியாம், சந்தானம் இருக்காரான்னு கேட்டார், யர்லி மார்னிங்க் டிசப்பாய்ண்ட் பன்ன வேண்டாமேன்னு கொஞ்சம் பேசிண்டிருந்தேன், ராங்க் நம்பர்னு வெச்சிக்கோயேன்"
அதிர்ந்த்து போய் நானும் ஃபோன வெச்சிட்டேன்.