Wednesday, April 20, 2011

மாயவலை - (முடிந்து தொலைந்தது)


மாயவலை - 1
டிரிங்க் என்ற சத்தம் கேட்டு விழித்தேன்.நான் இப்போது தோட்டத்தில் .ரோஜாத் தோட்டத்தின் எழிலுக்கு சிறிதும் தொடர்பில்லாமல் ஒரு வெப்ப அலை என் மீது வீசியது. "ஸ்கேனிங்க் ஃபார் வைரஸ்" என்ற எழுத்துக்கள் என் தலைக்கு மேல் மின்ன நான் ஸ்கேன் செய்யப் பட்டேன்.ஸ்கேன் முடிந்ததும் என் மீதான வெப்பம் குறைந்தது. நான் .EXE என்ற அமைப்பில் காப்பாற்றப் பட்டேன் இல்லை சேமித்து வைக்கப் பட்டேன் கோப்பாக.


இதென்ன விபரீதம் என்று பதறியபடி இருக்க இன்னும் சிலர் , அப்ளிகேஷன் களாகவும் , எழுத்து கோப்புக்களாகவும் இருந்தனர்.என்னை பரிவோடு பார்த்த ஒரு பிட்மேப் ரூபமாக இருந்த கோப்பு மனிதரிடம்,

"இங்கிருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள்" என்று கெஞ்சினேன்."எப்படி வந்தயோ அப்படித்தான் போகமுடியும்" என்றார்.

"நீ அளக்கப் பட்டுவிட்டாயா?"

"அப்படின்னா?"

"இந்த தளத்தில், தினமும் ஒரு முறை எஸ்டிமேட்டர் என்ற , ஒரு மென்பொருள் இயங்கும், உன் புத்திக்கூர்மை, நினைவாற்றல் அடிப்படையில் உனக்கு ஒரு விலை நிர்ணையிக்கப்படும், அந்த விலையை கொடுத்து உன்னை டௌன்லோட் செய்ய யாராவது முன்வந்தால் மட்டுமே வெளியேர முடியும். கணினியிலிருந்து கணிணிக்கு செய்திகள் அனுப்ப தொடங்கும்போது நான் வந்தேன், வலைதளங்களின் ஆரம்பகாலம் என்று கூட சொல்ல முடியாது,இப்போ வெறும் 1.5$ தான் என் விலை, என் கதியே இப்படி,என்னைக்கு விலை 1$ க்கு குறையுதோ அன்னிக்கு ரீஸைக்கிள் பின்னில் போடுவார்கள்" என்றவர் அப்படியே உறைந்து போனார், எனக்கும் அந்த தளம் ஸ்தம்பிப்பது போல் உணர்ந்தேன், வினாடியின் லட்சத்தில் ஒரு கணம் கழிந்ததும் சகஜ நிலைக்கு வந்தோம், அவரே விளக்கினார்,

"எஸ்டிமேட்டர் இயக்கம் தொடங்கும் போது இந்த தளம் சற்று ஹேங்க் ஆகும் , ஒன்றும் கவலை வேண்டாம், இன்னும் சில நொடிகளில் உன் விலை தெரிய வரும்".சற்று நேரத்திற்கெல்லாம் செய்தி டப்பா சொன்னது "வாழ்த்துக்கள் உங்கள் விலை 546,729,423.89 $".பிட்மேப் பரிகாசமாக சிரித்தார் "ஹா ஹா ஒன்னாரூபாய் என்னையே யாரும் எடுக்கல, உங்கள் நிலை கவலைக்கிடம் தான், ஒரு வேளை உங்களை யாரும் மீட்க தயாரானால், என்னை இலவச இணைப்பாக கொண்டு போவீர்களா ?ஹா ஹா ".

அப்படியே அவரது ஹெட்டரை சிதைத்து கரப்ட் சீ சீ அதாவது கழுத்தை நெறித்து கொலை செய்ய வேண்டும் போல் தோன்றியது.

"உன்னை எதாவதொரு உலக விரோத சக்தி நிச்சயம் விலைக்கு வாங்கி, உன் அறிவை அவர்களது நலனுக்கு உபயோகிப்பார்கள்"

"நான் செய்ய மறுத்தால்?"

"என்னப்பா இவ்வளவு அறிவிருக்குற ஒனக்கு காபி பேஸ்ட் பத்தி தெரியாதா?. நீ இனி மனிதன் இல்லை ஒரு மென்பொருள் , அவர்கள் க்ளிக் செய்தால் நீ ஓட வேண்டும் என்பது தானே மென்பொறுளின் விதி? உன்னைப்போல் பல காப்பிகளை உருவாக்கி இதே விலைக்கு விற்பார்கள், "

"எத்தனை வடிவங்களில் இருந்தாலும் நான் அல்லது நானாகிய நாங்கள் உடன்பட மாட்டோம்"

"உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் , ஆனால் நகல்களை மாற்றும் உரிமை உண்டு.புரியவில்லையா? இங்குள்ள நாம் எல்லோருமே ரீட் ஒன்லி (Read only) பாதுகாப்பில் இருக்கிறோம், நமது நகல்களின் வடிவதிலிருந்து இந்த பிடிவாதத்தை மட்டும் எடுத்தெறிய வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் என்று ஒரு சேவை இருக்கிறது, அதான் வின்டோஸ் சர்வீஸ்.நகலெடுக்கும் முன் எதாவது செய்ய வேண்டும் வேறு வழி இல்லை"

"என்னறிவு மற்றும் நினைவாற்றல் குறைந்தால்?எனக்கு மூளையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டால்?என் விலையும் குறையும் , என்னுயிரே போனாலும் என்னை தவறான பயன்பாட்டிற்கு உபயோகிக்க முடியாது இல்லையா?

"ஆமாம் ஆனால் எப்படி அது சாத்தியம்? "

"நான் மட்டும் அல்ல, உங்கள் எல்லோரையும் அப்படி செய்ய முடியும், விடுவிக்க முடியும் "

"நிஜமாகவா?"

"நாம் எல்லோரும் வைரஸாக மாறி ஆட்டொ டௌன்லோட் முறையில் தப்பித்துக் கொள்ளலாம்"

"வைரஸாக மாற வழி?"

"இங்கு யாராவது HTML இருக்கிறிர்களா?"

"நான் இருக்கிறேன்" என்று ஒரு முன்வந்தாள் ஒரு கோப்பு பெண்.

"நல்லது, முதலில் யூட்யூப் பக்கத்திற்கு சென்றடையுங்கள், இங்குள்ள, ஒவ்வொரு நோட்பேட் வடிவ நண்பர்களும் நான் சொல்லும் எழுதுக்களை, அந்த பக்கத்திலிருக்கும் தேடு பெட்டிக்கு கொடுங்கள்"

"வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் இயக்கம் இன்னும் 15 நொடிகளில் துவங்கப் போகிறது" என்று பதறினார் பிட்மேப்.ஒரு செய்திப்பெட்டியில் அதன் கௌன்ட் டௌன் துவங்கியது. "15 வினாடிகள் பாக்கியுள்ளது"

"பதட்டம் வேண்டாம்",நான் சொல்ல சொல்ல ஒவ்வொரு எழுத்தாக தானம் செய்தார்கள் நோட்பேட் குடும்ப நண்பர்கள்

"V" - (14 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (13 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (12 வினாடிகள் பாக்கியுள்ளது):"R" - (11 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (10 வினாடிகள் பாக்கியுள்ளது)

"C" - (9 வினாடிகள் பாக்கியுள்ளது):"H" - (8 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (7 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (6 வினாடிகள் பாக்கியுள்ளது):"M" - (5 வினாடிகள் பாக்கியுள்ளது)

"Y" - (4 வினாடிகள் பாக்கியுள்ளது)

தேடு பொத்தானை தட்டி முதல் ரிசல்ட்டை தேர்ந்தெடுத்த அந்த நொடியே (3 வினாடிகள் பாக்கியுள்ளது) எல்லோரது மூளையும் குழம்பியது, அனைத்துக் கோப்புக்களும் வைரஸ்களாக மாறி அந்த தளமே செயலிழந்து போனது.(2 வினாடிகள் பாக்கியுள்ளது).



நிலவிலிருந்து பூமிக்கு தள்ளி விட்டது போல் இருந்தது....எதன்மீதோ மோதி விழித்துக்கொண்டேன்.



இப்போது மேஜையில் , என் அண்ணன் மகளின் நான்காம் வகுப்பு கணித புத்தகம் இருந்தது, தடுமாறி அதை நெருங்கும்போது அறைக்குள்ளே நுழைந்த என் அம்மா கேட்டாள் ," நல்லா தூங்கினியா? இப்போ வைரல் ஃபீவர் பரவாயில்லயா?"





ஆண்டிபையாட்டிக் மாத்திரை பாட்டில் என்னை பார்த்து கண்சிமிட்டியது.

.

14 comments:

பாரதசாரி said...

This is an attempt to interpret post appraisal morale in IT industry

bandhu said...

இரண்டாம் பாகம் நன்றாக இருந்தாலும், அது இல்லாமலே முதல் பாகம் ஒரு முழுமையான சிறுகதை. In fact, a better one!

பாரதசாரி said...

Dear Bandhu:
There are lot of compex implications I tried (and failed in this part) to see where ppl started becoming like machines in early this millenium and now becoming almost like a trained software. If a person with little exposure to technical terms and appraisal system , they will be able to appreciate the similies. I am sorry if this has not impressed you.However I assure not to do this in future,

Best Regards!

bandhu said...

Actually, I was impressed by both the parts. Just thought that if the first part alone was the story, it was enough to give the effect of o'henry style story (remember, the lady and the tiger?). I very much like the story.

பாரதசாரி said...

Dear Bandhu,
You have read my mind!!!!!!!!!.It was just because at the last moment I wrote thodarum second part was penned:-(. and thanks for the compliments and genuine comments!!

please share your comments on other posts too that way I can improve a long way!!!

Cheers and best Regards!

Harish said...

Jay: I agree with Bandhu's first comment. But to be honest nice try.
In fact, you could have also replaced the 15 seconds as 15 milli seconds or something like that....
Fair stuff.

பாரதசாரி said...

Thanks Harish,
I think only bandhu , you and my wife understood this(ofcourse me) .I am not going to provide a Konaar urai for this :-). Also I have not used anything tough that a normal blog reader does not know , still I got feed back in mails saying they did not under stand.I cud have even tried micro seconds instead of seconds, but seeing at the mail response I feel I should have mentioned 15 hours... that is where few ppl still are. I appreciate Bandhu's comment where he had found a whole story in an incomplete one.

DR.K.S.BALASUBRAMANIAN said...

கதை மிக அருமை.
நீங்க சுஜாதாவின் பரமவிசிறியென நினைக்கிறேன். உங்கள் கதையில் அவர் பாதிப்பு தெரிகிறது.

பாரதசாரி said...

மிக்க நன்றி திரு பாலா , சுஜாதா அவர்களைக் கடக்காமல் யாரும் இருக்க முடியாதே :-)

V.P.Venkat said...

veerachamy padam paartha intha gathi thaan,, ur just lucky to have ended with viral fever,,,rather than stroke or heart attack after seeing such an "awesome" movie...good one,,loved both the parts

மதன் said...

thala s/w aasamiya irunthiruntha kathai innum nala purinchirukum......intha kathai ethoda oppedu nu puriyala.....ana nala irunthuthu vazhthukal//

JK said...

Loved the style and the way you intertwined computer programming with psychedelic thread.
Loved the way you subtly challenged the readers to figure this out.
I was a little sad to see you apologetic to your posts. Agreed its a bit deep but not all posts need to be explicit and reader friendly.
Loved your flow of thought and smooth interweaving of conversations with concept.
Would love to read more from you.

JK
http://www.facebook.com/JaaeeK

பாரதசாரி said...

Dear JK,
not every time I have enjoyed all the comments even though it is positive.This comment of yours is a reare one that delights me.Many thanks for that.
/ was a little sad to see you apologetic to your posts. / Thanks again, it's just I thought of being apologetic rather than being arrogant by saying "read what I post!".Please read the previous stories as well and share your comments.

Cheers!

TERROR-PANDIYAN(VAS) said...

சூப்பரு கதை... :)

Post a Comment